Pages

Thursday, 26 May 2016

சுரமும் அபசுரமும்








சுரமும் அபசுரமும்




காகங்கள் கரைகின்றன
அதற்குள்ளும் ஒரு லயம் இருப்பதை
எத்தனைபேர் அவதானித்திருக்கிறார்கள்?
எல்லாவற்றிலும்
ஏதோ ஒரு ஒத்திசைவு இருக்கத்தான் செய்கிறது
எல்லாம் அப்படித்தான் இருக்க வேண்டுமா ?
ஏற்ற இறக்க மில்லாத சுருதியில் இனிமையுண்டோ ?
இரண்டு கண்களின் பார்வையும் 
ஒரே தரத்தில் இல்லை
இரண்டு காதுகளின் கேட்கும் திறனும்
ஒருப்போல் இல்லை
இரண்டு கால்களின் வலுவும்
வித்தியாசப்படுகின்றன
இரண்டு கைகளும் ஒத்திசைவாய் இருப்பினும்
ஒருப்போல் இல்லை 
இரண்டு முலைகளும் கூட
வித்தியாசப்படுகின்றன
நகலலெடுத்ததிலும் சிறு
வித்தியாசம் இருக்கத்தான் செய்யும்
ஆனாலும் 
உன்னைப் போல் நானும்
என்னைப் போல் நீயும் 
ஒரே மாதிரி சிந்திக்க வேண்டுமென
எதிர்ப்பார்ப்பது
எந்தவிதத்தில் நியாயம் ?
சுரமும் அபசுரமும் அருகருகில்தான்
அளவின் மாறுபாட்டில்தான்
நீயும் நானும் சந்திக்கும் புள்ளி எது ?
புரிந்தால் சுரம் வசப்படும்
இல்லையேல்……

No comments:

Post a Comment