Pages

Friday, 23 March 2012

கவிதையாக இல்லை


 நானும்  எழுதி எழுதிப் பார்க்கிறேன்
கவிதை போல் இருக்கிறது
ஆனால்
கவிதையாக இல்லை

அட இந்தப் பொடியன்
அதிராமல்
நெஞ்சுக்குள்
குடியேறிவிட்டான்
அவன் கவிதைக்கு மட்டும்
அந்த வல்லமை எப்படி வந்தது?

தன் தவறென
உள் மனது குத்திக்காட்டினாலும்
அவள் தவறென
மனைவியிடம் வாதிட்டுப் பழகிய
ஆணாதிக்கமனம் போல்
என் கவிதை
தோற்ற இடத்தை
வார்த்தைகளால்
இட்டு நிரப்புகிறேன்

அறிவால் உரச உரச
தீப்பொறி வந்தது
கவிதை வரவில்லை

அனுபவத்தில் அலச அலச
சுயம் பளிச்சிட்டது
கவிதை பல்லிளித்தது

அந்த பொடியனின்
கவிதை
வென்றது எப்படி?

இதயம் எழுதியதால்
கவிதையானது.


-சு.பொ.அகத்தியலிங்கம்

2 comments:

  1. kavithai maathiriyaana oru kavithai!

    ReplyDelete
  2. யார் அந்த பொடியன்?.....

    ReplyDelete