Pages

Sunday, 30 November 2025

நீ நீயும்

 

நீ ஏமாந்திருக்கிறாய்

நீயும் ஏமாற்றி இருக்கிறாய்

நீ அவமானப்பட்டிருக்கிறாய்

நீயும் அவமானப்படுத்தியிருக்கிறாய்

நீ கடன் வாங்கியிருக்கிறாய்

நீயும் கடன் கொடுத்திருக்கிறாய்

நீ விபத்தில் சிக்கியிருக்கிறாய்

நீயும் விபத்தை உண்டாக்கி இருக்கிறாய்

ஆனால் என்ன

உனக்கு நேர்ந்தது எதையும் நீ மறக்கவில்லை

உன்னால் பிறருக்கு நேர்ந்தது எதுவும் உன் நினைவில் இல்லை.

உன்னை ’ஞாபகப் புலி’ என்பதா ? அல்ல

இதைத்தான் ’காரியமறதி’ என்பதா ?

 

சுபொஅ.

30/11/25

No comments:

Post a Comment