Pages

Friday, 4 July 2025

ஒரு காவல் கொலை [ lockup murder ] யும் நம்மை நாமே விசாரிக்க வேண்டிய தேவையும்….

 


ஒரு காவல் கொலை [ lockup murder ] யும் நம்மை நாமே விசாரிக்க வேண்டிய தேவையும்….

சில நிகழ்வுகள் உணர்ச்சியைக் கொம்பு சீவிவிடும் . அதைச் சுற்றியே ஊர் முழுக்க பேச்சாக இருக்கும் . கருத்து கந்தசாமிகள் காட்டில் அடை மழை கொட்டும் . பொன்னான ஆலோசனைகள் எங்கும் பரபரப்பாகப் பேசப்படும் . அவற்றை நுணுகிப் பார்த்தால் சிரிப்பு வரும்.

அஜீத்குமார் லாக் அப் கொலையைத் தொடர்ந்து , “ போலீஸ் கையிலிருந்து லத்தியைப் பிடுங்க வேண்டும்…” என்கிற அளவுக்கு பொங்குகிறார்கள் ; கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்த்தால் போலீஸ் என்கவுண்டர் கொலைகளின் போது “ இப்படி நாலு பேரைப் போட்டால்தான் பயம் வரும் . திருந்துவான்கள் …”என என்கவுண்டர்களைப் புகழ்ந்து தள்ளுவார்கள் . “ நான் போலிஸல்ல பொறுக்கி ..” என சினிமா வசனத்துக்கு கைதட்டி விசிலடிப்பார்கள் . இப்படி அந்தந்த நேரத்தில் பொங்கி அதிதீவிரம் பேசும் யாருக்கும் பிரச்சனையின் ஆழமும் அகலமும் புரியவே இல்லை என்பதுதான் உண்மை .

[ இந்த குறிப்பிட்ட நிகழ்வு குறித்தோ அதன் அரசியல் குறித்தததோ அல்ல இப்பதிவு .]

மனித உரிமை பற்றிய ஞானம் காவல்துறைக்கு அறவே கிடையாது என்பது உண்மை . கலைஞர் முதல்வராக இருந்த போது காவலர்களுக்கு மனித உரிமையைக் கற்றுக்கொடுக்க பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்தார் . அதில் சென்னையில் சில வகுப்புகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க நானும் போனேன் . எனக்கு போக்குவரத்துச் செலவு மற்றும் பயிற்சிக்கூலி எல்லாம் கிடைத்தது .ஆனால் மாணவரகளாக வந்த போலிஸார் வகுப்பை சட்டை செய்யவே இல்லை . மனம் வருந்தி ஒரு கட்டத்தில் நான் போவதை நிறுத்துவிட்டேன் . என் போல் பயிற்சி அளிக்கச் சென்ற பலரின் அனுபவமும் அப்படியாகத்தான் இருந்தது .

மனித உரிமை என்பது ஏதோ என் ஜி ஓக்கள் , தன்னார்வக் குழுக்கள் பேசுகிற ஒன்றாகக் கிட்டத்தட்ட சுருங்கிப் போனது . கம்யூனிஸ்ட் கட்சியும் தலித் அமைப்புகளும் இதில் ஆர்வமும் அக்கறையும் காட்டினாலும் இன்னும் ஆழமாக சமூக பொதுபுத்தியின் கூறாகவில்லை .எங்கேனும் அநீதி அலங்கோலமாய் வெளிப்படும் போது பொங்குவதோடு நம் பொதுபுத்தி அடங்கிவிடுகிறது.

சரி ! எடுத்துகாட்டாய் ஒன்றைச் சொல்கிறேன் . விசாரணைக்கு அழைத்துச் செல்லும் போது காவல்துறை பின்பற்ற வேண்டிய நெறிகளாக உச்சநீதி மன்றம் சுட்டிக்காட்டியவை எவை எவை என எத்தனை பேர் அறிவோம் ?

The eleven Supreme Court guidelines related to arrest and detention are:
1. The police officer who is going to arrest a person should bear accurate, visible, and clear identification and name tag with the designation. The particulars of all police officers/constables who handle interrogation of the arrestee must be recorded in the register.
2. The police officer who is going to arrest shall prepare a memo of the arrest and the time of the arrest, and such memo will be attested by at least one witness who may be either the member of the family of the arrestee or a respectable person of the locality from where the arrest is made. The memo will be signed by the arrestee and shall contain the time and date of arrest.
3. A person who has been arrested or detained is entitled to give information to his friend or relative or other person known to him (within 12 hours).
4. The time, place of arrest, venue of custody must be notified by the police to the friend or relative or known person.
5. The person arrested must be made aware of his right.
6. An entry must be made in the case diary at the place of detention regarding the person’s arrest and mention the next friend of the arrestee who has been informed of the arrest.
7. The arrestee should, where he requests, be also examined at the time of his arrest and major and minor injuries, if present on his body, be recorded at that time.
8. The arrestee should be subjected to a medical examination by a trained doctor. (section 54)
9. Copies of all the documents, including the arrest memo, should be sent to the magistrate for his record.
10. The arrestee may be permitted to meet his lawyer during the interrogation, not throughout the interrogation.
11. A police control room should be provided at all districts and state headquarter, where information regarding the arrest and place of custody of the arrestee shall be communicated by the officer arresting within 12 hours of the arrest, and it should be displayed on a notice board.
1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும்.
2. கைது செய்தவுடன் அந்த இடத்திலே கைது குறிப்பு தயாரிக்க வேண்டும்.
3. கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்குத் தெரிவிக்க வேண்டும்.
4. கைது செய்யப்பட்ட விபரம் 8 மணி முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.
5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்குத் தெரிவிக்க வேண்டும்.
6. காவலில் உள்ள இடத்தில் கைது விபரம், கைது குறித்தத் தகவல் தெரிவிக்கப்பட்ட விபரம் மற்றும் எந்த அதிகாரியின் பொறுப்பில் இருக்கிறார் என்ற விபரங்களை பதிவேட்டில் குறிக்க வேண்டும்.
7. கைது செய்யப்பட்டவர் உடல் நிலையைப் பரிசோதித்துச் சோதனைக் குறிப்பு தயார் செய்ய வேண்டும்.
8. கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.
9. கைது செய்யப்பட்ட ஆவணங்களைக் குற்றவியல் நடுவருக்கு அனுப்ப வேண்டும்.
10. கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும்போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.
11. கைது பற்றிய தகவல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.

மேலும் மொத்த விசாரணையும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட வேண்டும் . காவல் நிலையம் முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்தி இருக்க வேண்டும் . தனி இடத்தில் விசாரிக்க கூடாது .இப்படி நிறைய வழிகாட்டல்களை அவ்வப்போது உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கிறது என்பதை அறிவோமா ? இவற்றை எல்லாம் பள்ளி பாடத்தில் சொல்லித் தருகிறோமா ?
கொடுமை நடக்கும் போது பொங்குவது மட்டும் போதாதாது . மனித உரிமை என்பது நம் அடிப்படைப் பயிற்சி ஆகவேண்டும் . அச்சத்திலிருந்தும் பசியிலிருந்தும் மனித குலத்தை விடுதலை செய்வதே மனித உரிமையின் இறுதி இலக்கு . உண்ணும் உணவு , உடுத்தும் உடை எல்லாம் அவரவர் உரிமை .இதில் மதவெறி கலந்து வெறுப்பு அரசியல் கலந்து கலவர விதை தூவுவோர் அஜீத்குமாருக்காக மனித உரிமை பற்றி நீட்டி முழக்குவதுதான் நகை முரண்.

“பட்டப் பகல் திருடர்களை
பட்டாடைதான் மறைக்கிறது - ஒரு
பஞ்சையைத்தான் திருடன் என்று
ஊரு கூடி உதைக்குது”

பட்டுக்கோட்டைப் பாட்டை எத்தனை ஆயிரம் முறை கேட்டிருப்போம் ; அதன் பின்னால் ஒளிந்திருக்கும் வர்க்கப் பார்வையை வர்க்க அரசியலை வாழ்க்கையில் பெற்றோமா ? இனியேனும் பெறுவோமா ?

ஒரு காவல் கொலையை வைத்து நம்மை நாமே விசாரிப்போம் ! சரிதானே !

[ ரிதன்யாக்களின் கொலைக்கு பின்னால் … நாளை பார்ப்போம்…]

சுபொஅ.
3/07/25.

No comments:

Post a Comment