Pages

Tuesday, 18 June 2024

வான் முட்டத் தேடினாலும்.....

 




அவமானங்களை ,துரோகங்களைச் சந்திக்காத

ஒருவரைத் தேடுகிறேன் நெடுநாளாய்

 

பார்க்கின்ற ஒவ்வொருவரும்

பதறவைக்கும் கதையன்றோ சொல்கின்றார்

 

வென்றவரும் சொல்கின்றார் சந்தித்தவற்றை

ஒருபோதும் சொல்லவில்லை தான் செய்தவற்றை

 

தோற்றவரும் சொல்கின்றார் பட்டவற்றை

ஒருபோதும் சொல்வதில்லை தன்பக்கத் தவறுகளை

 

நான் மட்டும் விதிவிலக்கா ? சுத்தசுயம்பா ?

வான் முட்டத் தேடினாலும் குறையில்லா மனிதரில்லை.

 

எடை போட்டு கொள்வன கொள்க! – ஊர் உலகம்

தழைக்க ஓர் அடியேனும் முன்னோட்டு செல்க !

 

சுபொஅ.

18/06/24.


No comments:

Post a Comment