Pages

Friday, 31 May 2024

அலையில்லா கடல் தேடி…

 



அலையில்லா கடல் தேடி…

 

ஒரு குவளைத் தண்ணீரிலும் அலை இருக்கும்.

ஆழக் கிணற்றிலும் அலை இருக்கும்

குளம் ,ஏரியிலும் அலை இருக்கும்

கடலில் நிச்சயம்  அலை இருக்கும்!

எல்லா அலையும் ஒன்றாமோ ?

 

காலை முத்தமிடும் அலையும்

ஊரைச் சுருட்டும் சுனாமி அலையும் ஒன்றாமோ?

அலையில்லா கடல் அழகென்று யார் சொல்லுவார் ?

கரையோரம் மட்டும் அலை முத்தமிடுமா ?

நடுக்கடலில் அலை நித்திரை கொள்ளுமா ?

ஆழ்கடலில்தான் சுனாமி தோன்றும் என்கிறார்களே !

 

நித்தம் அலையோடு போராடி வாழ்வோரும் உண்டு

அலையாமல் அசையாமல் ஜடமாக வாழ்வோரும் உண்டோ ?

அலையில்லா கடல் தேடி அலைவாயோ ?

அலையடிக்கும் மனசோடு நீ போராடலாம்

அலையில்லா பொழுதொன்று வாய்க்குமோ !

அலையின் அளவறிந்து ஒழுகு ! – தினம்

அலையோடு நீராடிப் பழகு ! அது அழகு !

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

31/05/2024.

No comments:

Post a Comment