Pages

Friday, 19 November 2021

பொறியில் சிக்கிய எலியென

 

எங்கும் ஒரே புழுக்கம்

வெக்கை தாள முடியவில்லை

காற்று மருந்துக்கும் இல்லை

மூச்சுத் திணறுகிறது

கதவு ஜன்னல் என

ஒவ்வொன்றாய் சாத்துகிறார்கள்

ஆங்கார சிரிப்பொலி அச்சுறுத்துகிறது

பொறியில் சிக்கிய எலியென

கொண்டாட்டித் தீர்க்கிறார்கள்

கடவுளும் கார்ப்பரேட் வசமாகிவிட்டார்

நமக்கு நாமே துணை

நாம் பலர் அவர் சிலர் !

இனியும் கதவைத் தட்டிக்கொண்டிருக்க

முடியாது… உடைத்தெறி !

 

சுபொஅ.

18/11/2021.

No comments:

Post a Comment