Pages

Thursday, 29 July 2021

நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 1 .

 சிகப்பு அட்டை , .முகப்பில் தீக்கதிர் என பொறிக்கப்பட்டிருக்கும் .நிருபர் , சென்னை செங்கை மாவட்டம் என்கிற விபரமும் என் பெயரும் உள்ளே இருக்கும் .ஆசிரியர் எனும் இடத்தில் கே.முத்தையா கையொப்பம் இட்டிருப்பார் .

நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 1 .
மறுவாசிப்பு புராணங்களுக்கும் வரலாற்றுக்கும் இலக்கியத்துக்கும் மட்டுமல்ல தனிநபர்களுக்கும் வேண்டும்.
ஒருவரைப் பற்றி அவர் வாழ்ந்த காலத்தில் மிகை மதிப்பீடோ ,குறை மதிப்பீடோ செய்வது இயல்பு ; ஏனெனில் நிகழ்காலத் தேவையின் நிர்ப்பந்தமும் புரிதல் இடைவெளியும் அப்போது அதிகம் .
வெகுதூரம் வந்தபின் திரும்பிப் பார்க்கும்போது குறை நிறைகளைப் பகுத்துப் பார்க்க வாய்ப்பாகிறது .
தோழர் கே .முத்தையா அவர் வாழும் காலத்தில் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் என்னுள் பதிவானவர் . இப்போது எண்ணிப் பார்த்தால் பல மதிப்பீடுகள் தலைகீழாகின்றன . அவர் மிகுந்த உயரத்தில் காட்சி அளிக்கிறார் . அடுத்தடுத்த பதிவுகளில் அதனைப் பகிர முயல்கிறேன்.
அவசரகாலத்தில் நாமக்கல்லில் நடந்த பயிற்சி த மு எ ச முகாமில் பங்கேற்று பின் சென்னை திரும்புகையில் , இலக்கியம் அரசியல் எல்லாம் பேசிக்கொண்டே வரலாம் என்றுதான் அவரோடு சென்னை திரும்ப செந்தில்நாதன் சொன்னபோது சம்மதித்தேன் . ஆனால் பெரும் ஏமாற்றம் . ரயிலில் பொதுப்பெட்டியில் முட்டிமோதும் நெரிசலில் பயணித்த போது அவர் பேசவே இல்லை . ஒரு துண்டால் கண்ணை மூடிக்கொண்டு கூட்டத்தோடு படுத்துக் கொண்டார் .
சென்னை வந்த பிறகு ஓர் நாள் தோழர் செந்தில்நாதன் சொன்னார் , “ அவருக்கு காது சரியாகக் கேட்காது ,காது மிஷினை கழற்றி வைத்துவிட்டுத்தான் படுக்க முடியும் ; இன்னொன்று அரசியல் ,இலக்கியம் என்றெல்லாம் பேசிக்கொண்டே வந்தால் அது அவசரநிலை காலத்தில் நம்மை நாமே காட்டிக்கொடுப்பதாகாதா ?” நான் யோசிக்காத விஷயம் அது .என் பக்குவம் அவ்வளவுதான்.
நான் கட்சியின் முழுநேர ஊழியராவதற்கு அவரும் ஓர் காரணம். 1977 மே மாதம் தீக்கதிர் மே மலரில் முதல் பக்கத்தில் என்னுடைய கவிதையை வெளியிட்டு என்னை ஊக்குவித்தார் ; ஆயின் அக்கவிதை என் வேலையைப் பறித்து கட்சி முழுநேர ஊழியராக்க உதவியது . [ மேலும் விவரங்களுக்கும் அக்கவிதைக்கும் கீழே உள்ள சுட்டியை அமுக்கவும்.]
நான் அதிகாரபூர்வமாக 1978ல் நிருபர் என அடையாள அட்டை பெற்றது என் நினைவில் பசுமையாக உள்ளது . சிகப்பு அட்டை , .முகப்பில் தீக்கதிர் என பொறிக்கப்பட்டிருக்கும் .நிருபர் , சென்னை செங்கை மாவட்டம் என்கிற விபரமும் என் பெயரும் உள்ளே இருக்கும் .ஆசிரியர் எனும் இடத்தில் கே.முத்தையா கையொப்பம் இட்டிருப்பார் . அந்த அடையாள அட்டையை என் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருந்தேன் .சென்னையிலிருந்து பெங்களுக்கு 2013 ல் குடிபெயர்ந்தபோது தொலைந்துவிட்டது .
அப்போது கணினி , அலைபேசி ,பேக்ஸ் எதுவும் கிடையாது . தந்தி மட்டுமே ஒரே வழி .அதுவும் தமிழில் கிடையாது . ஆர்ப்பாட்டம் எனில் ARPPAATTAM என தங்கிளீஸில் அடித்து அனுப்ப வேண்டும் .பத்திரிகைக்கு சலுகைக் கட்டணம் உண்டு . அதற்கான அடையாள அட்டையைக் காட்டினால் போதும் .அப்போது பணம் கட்ட வேண்டாம். அந்தந்த பத்திரிகை நிர்வாகத்திடம் வசூலித்துக் கொள்வார்கள் .அந்த வசதி எனக்கும் தரப்பட்டிருந்தது . .கட்டுரைகள் ,படங்கள் எனில் தபாலில்தான் அனுப்ப வேண்டும். வாலிபர் சங்க நிர்வாகியாக பணியாற்றிய போதே இதுவும் என் இணை வேலையானது
தீக்கதிரோடு என் தொடர்பு அவசரகாலத்திலேயே தொடங்கிவிட்டது .என் அண்ணன் சு.பொ.நாராயணன் பழவந்தங்கலில் தீக்கதிர் விநியோகிப்பவர் .நான் தீக்கதிரில் அவ்வப்போது எழுதத் தொடங்கிவிட்டேன். ஆனாலும் தீக்கதிர் மீது கடும் விமர்சனங்கள் எனக்கு உண்டு .அன்று சென்னைத் தோழர்கள் பலரிடம் மிகுந்திருந்த ஒருதலைப்பார்வை என்னிடமும் தூக்கலாய் இருந்தது ..
1984 ல் சேலத்தில் நடந்த கட்சி மாநாட்டில் தீக்கதிரை கடுமையாக விமர்சித்துப் பேசினேன் . தோழர் .கே .முத்தையாவும் என் விமர்சனத்தில் தப்பவில்லை .சென்னைத் தோழர்கள் என் பேச்சை மெச்சினர் .அந்த மாநாட்டில்தான் நான் மாநிலக்குழு உறுப்பினர் ஆனேன்.
1994 ல் தீக்கதிரில் பொறுப்பாசிரியரான பிறகு என் அனுபவம் தோழர் கே.முத்தையாவை என்னுள் விஸ்வரூபமெடுக்க வைத்தது . அதை இன்னொரு நாள் எழுதுவேன்.
சு.பொ.அகத்தியலிங்கம்.
29 ஜூலை 2021.
May be an image of 1 person and text that says 'வாழ்வும் பணியும் கே. முத்தையா MarinaBook தொகுப்பு ஜனநேசன்'
Chinniah Kasi, Ramesh Bhat and 44 others
6 Comments
2 Shares
Like
Comment
Share

No comments:

Post a Comment