Pages

Tuesday, 22 September 2020

இப்போதுதான் சோம்பல் முறிக்கிறேன்

 


இப்போதுதான் சோம்பல் முறிக்கிறேன்

 

அவன் வானத்துக்கும் பூமிக்கும்

விஸ்வரூபமெடுத்து நின்றான்

தன் இரும்புக் கைகளால் கண்ணில்

கண்ட அனைத்தையும் பிடுங்கி எறிந்தான்

 

 

நூறாண்டு கண்ட ஆலமரமோ

பாரம்பரியமான கற்கோட்டையோ

மரமோ ,கட்டிடமோ ,உயிரோ ,செடி கோடியோ

எதையும் அவன் விட்டுவைக்கவில்லை

 

 

அவன் கால்களில் புல்பூண்டு புழு

அனைத்தும் துவம்சமாயின

அவன் தோள்களில் கால்களில்

ஒட்டிக்கொண்ட ஒட்டுண்ணிகள்

மகிழ்ச்சி ஆரவாரம் செய்தன

 

 

 “மானிடப் பதர்களே ! என்னையா எதிர்ப்பீர்?

ஊதிப் பறத்துவேன் !நசுக்கி அழிப்பேன் ?

ஹா…ஹா,,,, ஹா,,,,, ஹா,,,,” என்றவன்

அரக்கச் சிரிப்பை அடக்கியபடியே

கடுப்பாய்க் கேட்டான் , “ யாராடா

பூமிக்கு கீழே நெருப்பைப் புதைத்தவன் ?”

 

முனகலாய் வெளிப்பட்டது பதில்

 “ நான் தான் தூங்கும் எரிமலை

இப்போதுதான் சோம்பல் முறிக்கிறேன்.”

 

சுபொஅ.


No comments:

Post a Comment