Pages

Monday, 20 July 2020

கடவுளின் ஓட்டம்

உலகிலுள்ள
எல்லா கடவுளிடமும்
சரணடைந்து,
யாரும்
கடைக்கண்கூட
திறக்கவில்லை என
மனமுடைந்து
ஏழை
திகைத்து நின்றபோது
கண் எதிரே எல்லா கடவுளும்
தலைதெறிக்க
ஓடிக்கொண்டிருந்தனர்

மதவெறி பூதமும்
கார்ப்பரேட் பூதமும்
காவு கேட்டுத் துரத்துகிறது
நீயும் ஓடு என்றபடி
ஓடிக்கொண்டே இருந்தனர்
எல்லா கடவுள்களும்.

சுபொஅ.

No comments:

Post a Comment