Pages

Thursday, 11 June 2020

மூன்று குரங்குகளுக்கும்…





மூன்று குரங்குகளுக்கும்…



காந்தியிடமிருந்து
மூன்று குரங்கு பொம்மைகளை
இரவலாக வாங்கிவந்தேன் .

டோல் கேட்டில் போலிஸார்
பறிமுதல் செய்தனர்
அரசை விமர்சிப்பதாக
என் மீதும் குற்றாச்சாட்டு .

 “எல்லா குரங்கும்
கையில்
ஜால்ரா
வைத்துக் கொள்ளாது ஏன் ?”

நீதிபதி கேள்வியில்
அந்த குரங்களுக்கே
கோபம் வந்து
நீதி தேவதை சிலையை
உடைத்தெறிந்தது .!!!

சுபொஅ.

Saturday, 6 June 2020

'வாகன 'மாகமாட்டேன்!



'வாகன 'மாகமாட்டேன்!

(இக்கவிதை தனிப்பட்ட உணர்வல்ல. இந்திய சராசரி வயதான 67.8ஐ கடந்துவிட்ட /நெருங்கிவிட்ட தோழர்கள் பலரோடு பேசியதின் பொது உணர்வு) 

கொடிது கொடிது 
முதுமையும் தனிமையும்
அதனினும் கொடிது 
அடைபட்டுக் கிடத்தல்.

கடமைகள் முடிந்தது
கவலையும் குறைவு
வாழ்ந்தது போதும்
எந்த நொடியிலும்
புறப்படத் தயார்! 

எமது மரணம் மற்றவர் 
சுமை குறைக்கும்
வெற்றிடம் ஏதும்
நிச்சயம் இல்லை!

ஆனாலும் இந்த 
கொரனா மரணம்
வேண்டவே வேண்டாம்.

சாவுக்கு யாரும் வரமுடியாது
என்கிற மன உறுத்தலா?
போகும்போது பரபரப்பான
சாவுப்பட்டியலில் இன்னொன்று 
என்றாகிவிடக் கூடாது என்பதலா?

செத்தபின்பு
கொண்டாடினால் என்ன?
குப்பையில் தூக்கி எறிந்தாலென்ன?
செத்தவனுக்கு எல்லாம் ஒன்றுதான்.

சாவைக் கண்டு அஞ்சவில்லை
சாவை அரவணைக்கத்
தயாராகவே இருக்கிறேன்.
 பலருக்கு நோய் தொற்ற
கொரானா வாகனமாய் 
சாகவிரும்பவில்லை!
சரரிதானே! தோழா! 

சிலநாள் எம் தனிமை
அர்த்தமுள்ளதாய் இருக்கட்டும்!
தனிமை இனிதானது
கொரானா உபயம்.

சுபொஅ.

march 24 ,