Pages

Saturday, 23 May 2020

#பறவையும் நாமும்






#பறவையும் நாமும்



இரவின் வாசனை மெல்லப் பரவுகிறது
கதிரவன் மேற்கு நோக்கி விரைவதாய்
தோற்றம் காட்டுகிறான் நமட்டுச் சிரிப்புடன்
என்ன அவசரமோ தெரியவில்லை பறவைகளுக்கு
வேகவேகமாய் கூட்டம் கூட்டமாய் விரைகின்றன
இரவு முழுதாய் விரிவதற்குள் தம் இருப்பிடம்
போய்ச் சேரும் அவசரம் அவைகளுக்கு இருக்குமோ ?
காட்டையே நாம் அழித்துக் கொண்டிருப்பதை அறியுமோ ?

கிழக்கிலே கதிரவன் தோற்றம் காட்டுகிறான்
பூமி சுழல்வதை வசதியாய் நாம் மறந்துவிட்டோம் !
இரவு நிம்மதியாய்த் தூங்கியதோ ? கனவு கண்டதோ ?
எந்தப் பறவையும் தூக்கமாத்திரை சாப்பிட்டதாய்ச் செய்தி இல்லை
எதையும் சட்டை செய்யாமல் அதே ஒற்றுமையோடு பறவைகள்
பறந்து வருகின்றன இரைதேடவோ ?நம்மை நலம் விசாரிக்கவோ ?
சுதந்திரச் செய்தியைச் சொல்லியபடி வட்டமிடுகிறது
நாம் ஏமாந்த கதை அவைகளுக்குத் தெரியாதுதானே ?


சு.பொ.அகத்தியலிங்கம்.

No comments:

Post a Comment