Pages

Friday, 9 August 2019

எங்களின் தேனிலவு…. ???



எங்களின் தேனிலவு…. ???


கணவனும் மனைவியும்கூட
பேசுவதற்கு யோசிக்கும் சூழல்

24 மணி நேரமும் எங்கும்
துப்பாக்கு ஏந்திய ராணுவம்

அண்டை வீட்டாருக்கு
சலாம் சொன்னாலும்
சந்தேககப் படும் ராணுவம்

விளையாட்டை மறந்துவிட்ட
குழந்தைகளின் கண்களில் மிரட்சி

கழிவறையிலும் நிம்மதியோடு
உட்கார முடியவில்லை
வீதியை நிறைக்கும் பூட்ஸ் சப்தம்

சாப்பாட்டை ருசித்து சாப்பிடவும்
முடியவில்லை ..மனசுக்குள்
அச்சத்தின் பேரிருள்

நாங்கள் மகிழ்ச்சியாய்
தேனிலவு கொண்டாடுவதாய்
அந்த பேயரக்கன் மட்டுமே
சொல்லிக் கொண்டிருக்கிறான் .

இரவை விடிய வைக்க
எதையாவது செய்தாக வேண்டும்
எங்கள் சந்ததிக்காகவாவது .

[அவர்களாய் நான் உணர்ந்து எழுதியது ]

சு.பொ.அகத்தியலிங்கம் .
10 ஆகஸ்ட்2019.


No comments:

Post a Comment