உதவாதினி “பழம்பஞ்சாங்கம்” !!!!
நேற்றும் இன்றும் ஒன்றல்ல
நேற்றேதான் இன்றல்ல
நாளையும் இன்றும் ஒன்றல்ல
நாளைதான் இன்றல்ல
ஒவ்வொரு நாளும் வேறல்ல
ஒன்றின் தொடர்ச்சி ஒன்றாகும்
ஒன்றை மட்டும் பார்க்காதே
கோர்த்துப் பார்க்கத் தவறாதே !
புத்தாண்டு என்பது வேறல்ல
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டே!
பிறக்கும் நொடியில் புத்தாண்டே
போகப்போக பழங்கதையே !
அழுகை மட்டுமே சென்றாண்டோ
ஆனந்தம் மட்டுமே வருமாண்டோ
ஆனந்தம் , அழுகை இல்லாமல்
ஆண்டுகள் ஏதேனும் கடந்ததுண்டோ ?
ஒவ்வொரு நொடியும் போராடு!
ஒவ்வொரு நொடியும் முன்னேறு!
ஒவ்வொரு ஆண்டும் உன்னதமே!
உதவாதினி “பழம்பஞ்சாங்கம்” !!!!
சு.பொ.அகத்தியலிங்கம்.
No comments:
Post a Comment