Pages

Tuesday, 19 June 2018

நாடு என்பது







நாடு என்பது......

வளர்ச்சியின் பொருட்டு
வயல்களை அழிப்பது
தப்பே இல்லை !!!!

வளர்ச்சியின் பொருட்டு
கிராமங்களை  சுடுகாடாக்குவது
அதர்மம் இல்லை !!!!

வளர்ச்சியின் பொருட்டு
நீர்நிலை தூர்த்தல்
பிழையே இல்ல!!!!

வளர்ச்சியின் பொருட்டு
வனங்களை அழித்தல்
குற்றமே இல்லை !!!!

வளர்ச்சியின் பொருட்டு
மனிதரைக் கொல்லல்
பாவமே இல்லை !!

யாரின் வளர்ச்சி
என்றா கேட்டீர் ?
சமூகவிரோதியே !

காவி கார்ப்பரேட் வளர்ச்சி
என்பதறியா தேசவிரோதியே !
செத்துத்தொலை !!!!

நாடு என்பது
நாலய்ந்து பெருமுதலையே !
என்பதறிக !!!!

- சு.பொ.அகத்தியலிங்கம்.

No comments:

Post a Comment