Pages

Sunday, 10 November 2013

விளக்குவீரா !!!





விளக்குவீரா !!!

சு.பொ.அகத்தியலிங்கம்

இந்தியா நெடுகிலும்
தேடிச் சலித்தேன்
நாகரீக மனிதர்
ஊருக்கு ஒருவரேனும்
அகப்படவே இல்லை...

இன்னும்
இந்தியா நாகரீக நாடெனச்
சொல்லித் திரியாதீர் !!

இப்படிச் சொல்லுவதால்
தேசபக்தி இல்லாதவனென்றோ
தேச விரோதி என்றோ
என்மீது முத்திரை குத்துவதில்
எனக்கு வருத்தமே இல்லை !!

எனது கவலை எல்லாம்
நாகரீக இந்தியரைத்
தேடிக் கண்டுபிடிப்பதுதான்..

சாதியை
வரதட்சணையை
தொலைக்காதவரை
நாகரீக மனிதரென்று
எப்படிச் சொல்வது ?
அருள்கூர்ந்து விளக்குவீரா !!!

No comments:

Post a Comment