Pages

Friday, 28 December 2012

இரண்டு போதுமே..




இரண்டு போதுமே..

 
ஐயா
எனக்கொரு பெருத்த சந்தேகம்
இன்று நேற்றல்ல நீண்ட நாளாக இருக்கிறது
எவரேனும் தீர்ந்த்து வைத்தால்
தக்க சன்மானம் வழங்கப்படும்.
[ இது தேர்தல் வாக்குறுதி]

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி பிறக்கும்
முன்னரே குவியும்..
புத்தாண்டு வாழ்த்துகள்

பிறப்புச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம்,
அடையாள அட்டை, பள்ளிச் சான்றிதழ்,
கடவுச் சீட்டு, உரிமைச் சீட்டு
எல்லாவற்றிலும்
இந்த ஆண்டுக்கணக்கே இருப்பதாலும்,
எல்லாவற்றையும்விட சம்பளம்
இதனடிப்டையிலேயே கிடைப்பதாலும்
ஆங்கிலப்புத்தாண்டோ, கிரிகேரியன் ஆண்டோ
நானறியேன்.. எனக்கது கவலையில்லை

சத்தியமாய் இது
 நாளும் பயன்படும்
‘’ வாழ்க்கை ஆண்டு’’
இதுவன்றி வேறென்ன ?

சரி! சரி! போகட்டும்
இன்னொரு கணக்கும் இங்குண்டே!

உண்ணாமல் வாழமுடியுமா?
உழவின்றி உண்ணமுடியுமா?
உழவைப் போற்றும் தைத்திருநாளை
தமிழ்ப்புத்தாண்டென்பது
வாழ்வியல் வகுத்த வருடக்கணக்கு - இதை
ஏற்பதே பண்பாட்டுப் பெருமை..

நடைமுறை வாழ்வுக்கு ஆங்கிலப் புத்தாண்டு
நயத்தகு பண்பாட்டுக்கு தைப்புத்தாண்டு
இரண்டு போதுமே ! இன்னொன்று எதற்கு?

ஐயா! குழப்பம் இருக்கட்டும் ஒரு புறம்
கொண்டாடுவோம் புத்தாண்டை மகிழ்ந்து..
வாழ்க வளமுடன்! வளர்க தமிழுடன்!

n  சு.பொ.அகத்தியலிங்கம்.

n  மின்னஞ்சல் : agathee2007@gmail.com
n  அலைபேசி : 9442202734

 

No comments:

Post a Comment