Pages

Sunday, 27 May 2012

மீண்டும் மீண்டும் பாட வைக்கும் வணக்கப்பாடல்



‘‘தென்னகத்துக் கலைவானின் ராஜாவாம்
பண்ணைபுரப் பாவலர் வாய் திறந்தால்
ஏர்பிடிக்கும் உழவனுக்கோர் பாடல் வரும்
எந்திரத்தில் உழைப்பவர்க்கோ கவிதைவரும்
கதை சொல்லும் பாவலரின் தனிச்சிறப்பு;
கண்கலங்கும் ஏழைக்கும் சிரிப்புவரும்
கோழைக்கும் வீரம்வரும்போர்முழக்கும்
ஏழைக்கே உழைத்து அணைந்த அகல்விளக்கு"

இவ்வாறு பாவலர் தாசன் பாடகர் சந்தானம் புகழ்வது மிகை யாகாது.இளையராஜாவும், கங் கை அமரனும் இந்த அகல்விளக் கில் பாடிவளர்ந் தவர்கள்தாம். மாட்டுவண்டி போகாத ஊருக் கும் பாவலரின் பாட்டுவண்டி போனது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளில் இவர் பாட்டின் இடத்தை இன்னும் வேறொன்று நிரப்ப முடியவில்லை. காரணம் அவர் உண்மையைப் பாடினார். உரக்கப் பாடினார்.உணர்ச்சி ததும் பப் பாடினார்.சின்ன வார்த்தை களைக் கோர்த்து நெஞ்சை வரு டும் ராகத்தில் பிசைந்து தந்த தால் அவர் மக்கள் பாடகரானார். அவர் துட்டுக்கும் மெட்டுக்கும் கைதட்டுக்கும் அலையவில்லை. மக்கள் வாழ்க்கையை கண்டு மனம் நொந்து பாடினார்.மக்கள் வாழப் பாடினார்.

கச்சேரியின் ஆரம்பத்தில் வணக்கம் பாடுகிறபோதே கூட் டம் நிமிர்ந்து உட்கார்ந்துவிடும். இத்தனைக்கும் அந்த வணக்கப் பாடல் அவர் எல்லாக் கச்சேரி களிலும் இடம் பெறும். ஆனாலும் ஒருபோதும் திகட்டியதில்லை. இப்போது பாடினாலும் அதே துடிப்பும் உற்சாகமும் நம்மைத் தொற்றிக்கொள்ளும்.பாட்டுக் கச்சேரிகளில் பாடும் கடவுள் வாழ்த் துப் பாடல்கள் வெறும் சடங்காக எந்தச் சலனத்தையும் பெரும் பான்மையோருக்கு ஏற்படுத்துவ தில்லை. காரணம், அது சடங்கு முக்கிய கச்சேரி இனிதான் ஆரம் பிக்கும் என அனைவரும் கருது வதால் இருக்கலாம்.கூத்துகளில் வரும் கட்டியங்காரனின் பாட் டுக்கு இதைவிட கொஞ்சம் முக் கியத்துவம் உண்டு.ஏனெனில் அது கதையோடு ரசிகனைப் பிணைக்கும் பணியை நுட்பமா கச் செய்யும்.பாவலரின் வணக்கப் பாடல் இது எல்லாவற்றையும் விட ஒருபடி மேலே சென்று, கலக விதை தூவி புதிய சமுதாயத் துக்கு நல்வரவு கூறும். அத னைச் சற்று பார்ப்போம்.

 “தாய்நாட்டுக்காகத் தன் உடல்பொருள் ஆவியைத் தந்த தியாகிகட்கும் வணக்கம்” இது தான் ஆரம்பவரி.முதல் வணக்கம். அடுத்து பலருக்கு வணக்கம் சொல்லிவிட்டு இவர் கச்சேரியை தொடர்வார்.தம்பி குறுக்கிடுவார், “மொத அடியிலே தியாகிகளுக்கு வணக்கம்னு சொல்லி காங் கிரஸ் கட்சியைப் பாராட்டுறீங்க கடைசி அடியிலே காங்கிரஸுக்கு ஓட் டுப்போடாதவங்களுக்கு வணக் கம்னு சொல்றீங்க இது வித்தி யாசம் இல்லையா?” இக்கேள் விக்கு விடை சொல்லுகிறசாக் கில் சுதந்திரம் என்பது காங்கிரஸ் மட்டுமே போராடி பெற்றதல்ல என்கிற வரலாற்றை நறுக்கென்று எடுத்துவைப்பார். தியாகி பென்சன் வாங்காத கம்யூனிஸ்ட் தியா கத்தை எடுத்துச் சொல்வார். விடு தலைக்குப் பிறகும் தொடரும் அடக்குமுறையை எதிர்கொண்டு அடி வாங்கி,மிதிவாங்கி, சிறை பட்டு, பொருளை இழந்து, உயி ரையே பலிகொடுத்து மக்களுக் காக தியாக வேள்வில் தினம் குளிக்கும் கம்யூனிஸ்ட்களைப் பற்றி பாவலர் சொல்லும் போது உடல் சிலிர்க்கும்.மனம் கொதிக்கும்.

பாவலர் நுட்பமானவர். ஊழல் செய்து-தப்புத்தண்டா செய்து சிறைக்குப் போனவரை தியாகி ஆக்கிவிடக்கூடாதல்லவா அத னாலே அவர் பாடுவார், “சரியான முறையிலே அரசியல் கிளர்ச்சி யில் சிறைசென்ற வீரருக்கும் வணக்கம்”.ஆமாம் ஏதோதப்பு செய்து சிறைக்குப் போன கட்சிக் காரன் வீரன் அல்ல.அரசியல் கிளர்ச்சியில் சிறை சென்றால் தான் வீரன்.காசுக்கு வாயை வாட கைக்குவிடும் பேச்சாளர்கள் நாட் டில் உண்டு. அவருக்கெல்லாம் மாறாக “முற்போக்குக் கொள் கையை நாட்டில் பரப்பிவரும் சொற் பொழிவாளருக்கு வணக் கம்” என பொருள்பொதிந்த வணக்கம் சொல்வார். முழுநேர மும் கட்சிக்கு உழைக்கிறேன் எனப்பேர்பண் ணிக் கொண்டு பணம், பதவி, பந்தா எனத் திரி வோரை அல்ல, “முற்றும் துறந்து விட்டு மக்களுக்காய் உழைக் கும் முழு நேர ஊழியர்களுக்கும் வணக்கம்” என இலக்கணம் வரைந்து வணக்கம் சொன்னார்.

பகுத்தறிவைப் பரப்புவது பல வகையில் அமையலாம்.இது இது மூடநம்பிக்கை எனச் சாடலாம். இதைஇதைச் செய்யக்கூடாது எனக்கூறலாம், பாவலரோ சரி யான செயல்களைச் செய்பவர் களை தனித்தனியாகக் குறிப் பிட்டு அவர்களுக்கெல்லாம் வணக் கம் சொல்லுவதன் மூலம் தியாகி கள் வரிசையில் அவர்களையும் சேர்த்து வணங்கி அவர்களை ரோல் மாடல்களாக முன்னத்தி ஏர்களாக அடையாளங் காட்டு வார். “சாதிவிட்டுச் சாதி மகளைக் கட்டிக் கொடுத்த தாய்தந்தை யர்க்கெல்லாம் வணக்கம்.” கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் சாதிமாறி கல்யாணம் செய்தால் வெட்டுங்கள் என தமிழகத்தில் ஒரு சாதிமாநாட்டில் ஒருவர் கொக் கரிக்கிறார்.இன்றும் கவுரவக் கொலைகள் நடக்கின்றன, போலீஸ் அதிகாரியே கவுரவக் கொலையை நியாயப்படுத்து கிறார்.இத்தகையச் சூழலில் ஒரு இளைஞன் வாலிபவயது காரண மாக காதல் வயப்பட்டு கலப்புத் திருமணம் செய்யக்கூடும். அது பெரிதல்ல,பெற்றோரே முன் நின்று சாதிவிட்டு சாதி திரும ணம் செய்து கொடுப்பது என்பது மிகக் கடினமானது. உற்றார், உறவினர்,சொந்த சாதிக்காரர்கள், ஊர்க்காரர்கள் அனைவர் எதிர்ப் பையும் மீறி சாதி விட்டு சாதி திருமணம் செய்து கொடுக்க மிகப் பெரிய உள்ள உறுதி வேண்டும். இலட்சிய வேட்கை வேண்டும். அத்தகைய ரோல்மாடல்களை கோடிட்டுக் காட்டி பாவலர் வணங் கியது சமூக உளவியல் பாங்கில் உன்னதமானது.

அடுத்து பாடுவார், “தாலி அறுத்த பெண்ணை மறுமணம் செய்திட்ட வாலிபர்க் கெல்லாம் வணக்கம்” இதற்கு விளக்கமும் வேண்டுமோ? “பாலைக் குடங் குடமாய் சாமிதலையில் கொட்டி பாழ்படுத்தாதவர்க்கும் வணக் கம்”ஆமாம் கல்லில் கொட்டி னால் பாழ்தானே,ஏழை வயிற் றுக்கு ஈந்தாலாவது பயனுண்டு. இப்போது இந்த வரிகளைப் பாடவே தைரியம் வேண்டும்.மத உணர் வைப் புண்படுத்துவதாக கூப் பாடுபோடும் சிறுகூட்டத்திற்கு இப்போது குளிர்விட்டுப்போயுள் ளது அல்லவா?.

இதோடு மட்டுமல்ல அடுத்து வரிசையாய் அடுக்குவார், “பழைய பஞ்சாங்கம் சோதி டம் தலைவிதியை நம்பாத படிப்பாளிகட் கெல்லாம் வணக் கம்.” படிப்பாளின்னு பெயருக்குப் பின்னால் படித்துப்பெற்ற பட் டத்தை ஒட்டுப்போட்டுக்கொண் டால் போதுமா?கம்ப்யூட்டரில் ஜாத கம் சோதிடம் பார்க்கும் காலம் இது.அவர்கள் தொழில் தெரிந்த வர்களே தவிர, படிப்பாளி ஆவார் களா?மூடநம்பிக்கைகளுக்கு முழுக்குப் போடாமல் எவ்வளவு படித்தும் என்ன பயன்? ஆகவே தான் வணக்கம் சொல்லும் போதே ஒரு புதிய மனிதனை சித்தரித்து வணக்கம் சொன்னார் பாவலர். கடவுள் வாழ்த்தைவிட, கட்டியங் காரனின் பாடலைவிட பாவலரின் வணக்கப்பாட்டு பலமடங்கு உயர்ந்து நிற்பதின் ரகசியம் இது தான்.மீண்டும் மீண்டும் எங்கும் எப்போதும் பாவலர் வணக்கப் பாட்டுடன் நிகழ்ச்சிகளைத் தொடங்குவோம். அதுவே இன் றையத் தேவை.

சு.பொ.அகத்தியலிங்கம்
இலக்கியச்சோலை,தீக்கதிர்[28 மே 2012]

No comments:

Post a Comment