தமிழகம் எங்கே போகிறது?

Posted by அகத்தீ

ந்தியாவில் பல மாநிலங்களில் சமூக சீர்திருத்தக் கருத்துகள் இன்னும் முளை விட வில்லை. அங்கெல்லாம் சாதிய ஆதிக்கக் கருத்துகளும் பிற்போக்குச் சடங்குகளும் கோலோச்சுகின்றன. தமிழகம் விதிவிலக்கா னது. அயோத்திதாச பண்டிதர், பெரியார், சிங் காரவேலர் என மாபெரும் சமூக சீர்திருத்த முன் னோடிகள் இந்த மண்ணில் செயல்பட்டு முற் போக்கு கருத்துகளுக்கும் நடவடிக்கைக்கும் உகந்ததாக பக்குவப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாகிக் கொண்டிருக்கிறதோ? அந்தப் பெருமையை தமிழகம் மெல்ல மெல்ல இழந்து வருகிறதோ?

 காலமெல்லாம் விதவைத் திருமணத்திற் காக இந்தப் பெரியோர்கள் குரல் கொடுத்த மண்ணில் கோவைத்தம்பி ஒரு திரைப்படத் தின் மூலம் நீண்ட நாட்களுக்கு முன் கொள்ளி வைத்தார். ஆம். அந்தப் படத்தின் கதா நாயகி விதவை. அவளை விரும்புகிற ஒரு இளைஞன் அவள் நெற்றியில் குங்குமம் வைத்து விடுவான். உடனே, அவள் கொள்ளிக் கட்டையால் தன் நெற்றியைக் கருக்கிக் கொள்வாள்.இது விதவைத் திருமணத்துக்கு கோவைத்தம்பி வைத்த கொள்ளி. இப்படிப் பட்ட படங்கள் விதிவிலக்காக வந்தன.

இப் போது போகிறபோக்கு கவலை அளிக்கிறது. பெரியாரின் கைவிரலைப் பிடித்து நடந்த வர் என தன்னை எப்போதும் வியந்து கொள் கிற கருணாநிதியின் பேரன் உதயநிதி ஸ்டா லின் நடித்த படம் ஒன்று வெளியாகி யிருக்கிறது. அதில், முதல் பாடலே காத லுக்கு எதிராகக் கொச்சையாகப் பேசுகிறது. சமூக சீர்திருத்தச் சிந்தனை மங்கிவரும் சூழ லில் அதற்கொப்ப தங்களுடைய விற்பனைச் சரக்கையும் அந்தக் குடும்பம் மாற்றிக் கொண்டதோ என்னவோ? இதை ஏன் சொல்லுகிறோம் என்றால் சமீ பத்தில் காதலுக்கு எதிராக சாதி ஆதிக்க வெறி யர்கள் குரல் கொடுக்கிறார்கள்.

உதாரண மாக, வன்னியர் சங்க மாநாட்டில் குரு, கலப்பு திருமணத்தை எதிர்த்து வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசினார். கொங்கு வேளாளர் சங்கம், பிராமணர் சங்கம் உட்பட பல சாதி சங்கங்கள் கலப்புத் திருமணம், காதல் திருமணத்திற்கு எதிராக கடும் பிரச்சார நட வடிக்கைகளையும் சாதிரீதியான ஒடுக்கு முறை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக ஏடுகளில் செய்திகள் வந்துள்ளன. சாதி உருவாவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சாதியை இன்றைக்கும் தத்து வார்த்த ரீதியில் நிலை நிறுத்துவது மநு தர் மமே. சாதிக் கலப்பை மநு தர்மம் ஆதரிக்க வில்லை, கடுமையாக எதிர்த்திருக்கிறது. பல் வேறு தண்டனைகளை வழங்கியிருக்கிறது. இந்த சூழலில் சாதியை பாதுகாப்பதில் பெரும்பங்காற்றுவது “அகமண முறை”யே. எனவே, இந்த அகமண முறை நொறுக்கப்படா மல் சாதியத்தின் முதுகெலும்பை நொறுக்க முடியாது. அதற்கு காதல் திருமணங்களும், கலப்புத் திருமணங்களுமே மிகப் பெரிய ஆயுதம். சாதியத்தை பாதுகாக்க நினைக்கிற ஆதிக்க சக்திகள் மநுவின் வழியில் காதல் திருமணத்திற்கு எதிராக, கலப்புத் திருமணத் திற்கு எதிராக கொலை வாளைக் கையிலெ டுக்கின்றனர். இந்தச் சூழலில் “காதல் செய் வீர்” என முற்போக்காளர்கள் முன்னிலும் முனைப்பாய் களத்தில் நின்று போராட வேண்டியுள்ளது.

இது மட்டுமல்ல, சொந்தத்துக்குள்ளே திரு மணம் செய்வதால் பிறக்கிற குழந்தைகள் ஊனமாகவோ, வேறு குறைபாடுகளுடனோ பிறக்கின்றன என்பது நிரூபிக்கப்பட்ட மருத் துவ உண்மை. எதிர்கால சமுதாயம் ஆரோக் கியமாக பிறந்திட, வளர்ந்திட கலப்புத் திரு மணங்கள் பெருக வேண்டும். அதற்கு காதல் திருமணங்கள் பெருக வேண்டும். இதை எதிர்ப்பவர்கள் இந்திய சமூகத்தின் ஆரோக் கியத்தையும், முன்னேற்றத்தையும் கெடுப்ப வர்கள் என்பதை மறுக்க முடியாது.

காதல் மட்டுமல்ல, நம் சமூகத்தை பிற் போக்கு நுகத்தடியில் பூட்ட பெரும் முயற்சி நடக்கிறது. பெண்கள் பூப்படைவது இயல்பா னது, இயற்கையானது, தேவையானது. அதை யொட்டி அந்தப் பெண்களுக்கு அறிவியல் ரீதியாக விழிப்புணர்வு ஊட்டுவது அவசியம். பெற்றோர்கள் அவர்கள் வீட்டளவில் ஏதே னும் சடங்கு செய்துகொண்டால் அது பிரச் சனையல்ல. அது அவர்கள் சொந்த விருப்பம்.ஆனால், சமீபத்தில் பூப்படையும் சடங்கை பெரிய அளவில் விழாவாகக் கொண்டாடும் போக்கு வளர்ந்து வருகிறது. இதை உளவியல் நிபுணர்கள் ஏற்பதில்லை. சமூகவியலாளர் கள் ஏற்பதில்லை. முற்போக்காளர்கள் ஏற்ப தில்லை. பெண்ணியலாளர்கள் ஏற்பதில்லை. ஆனால் என்ன நடக்கிறது?சமீபத்தில் சென்னை புளியந்தோப்பில் ஒரு தனியார் கல்வி வியாபாரி மகள் பூப்ப டைந்ததையொட்டி வித்தியாசமாகக் கொண் டாடியிருக்கிறார். தன் மகளை ஹெலிகாப் டரில் அழைத்துவந்து இறங்க வைத்திருக் கிறார். இந்த விழா நடத்த ஒருபுறம் பெரும் பணச்செலவு. மறுபுறம் அரசாங்கத்திடம் இதற்கு அனுமதியும் பெற்றிருக்கிறார். இதைப் பற்றி சாகச பாணியில் வியந்து ஒரு வார ஏட்டின் இணைப்பில் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருக்கிறார்கள். அதில், ஒற்றை வரி இப்பிற்போக்குச் சடங்கு குறித்து விமர்சன மில்லை. அரசு எப்படி இவர்களுக்கு அனுமதி கொடுத்தது என்பது குறித்து ஒரு ஐயவினா கூட இல்லை. தமிழகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது?

இன்னொரு வார ஏட்டில் வெளிநாட் டினர் இந்தியப் பெண்களைத்தான் மனைவி களாக்கிக் கொள்ள விரும்புகிறார்கள் என பெருமை பொங்க செய்தி வெளியிட்டி ருக்கிறது. பெண்களைப் பாராட்டுவது போலவே மொத்த செய்தியும் அமைந்திருக் கிறது. ஆனால் உள்ளடக்கம் என்ன? இந் தியப் பெண்கள் எதிர்த்துப் பேச மாட்டார் களாம். அடங்கிப் போவார்களாம். மொத்தத் தில் கணவனுக்கு அடிமையாய் இருப்பாள் என்பதை நாசூக்கான நாகரீகமான வார்த் தைகளில் சொல்லியிருக்கிறார்கள். இப்போது யோசிக்க வேண்டிய நேரம். காதலுக்கு எதிராகவும், கலப்பு திருமணத் திற்கு எதிராகவும், பெண் விடுதலைக்கு எதிராகவும் பழைய பிற்போக்குத்தனங்களை புதிய வண்ணத்தில் விற்பனை செய்கிற மநு வின் பேரப்பிள்ளைகள் எங்கும் அலைகிறார்கள்.

தமிழக இளைஞர்களே! இவர்களிடம் எச் சரிக்கையாக இருங்கள். காதலைப் போற்று வோம்! பெண்மையைப் போற்றுவோம்! சாதி ஆதிக்கத்தைக் காறி உமிழ்வோம்! முற் போக்கு திசை வழியில் அயோத்திதாசப் பண் டிதரும், பெரியாரும், சிங்காரவேலரும் வகுத் தெடுத்த பாதையில் நடைபோடுவோம்! இச் செய்தியை உரக்கச் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.

குறிப்பு: தமிழகத்தில் சமூக சீர்திருத் தத்துறை ஒன்று ஏற்படுத்தப்பட்டதே, அது என்ன ஆனது? கோமாவில் இருக்கிறதா? குழி தோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டதா? 

சு.பொ.அகத்தியலிங்கம்.
நன்றி:தீக்கதிர் 26-05-2012



1 comments :

  1. Swaminathan K

    அருமையான நடை. தெளிவான கருத்துக்கள்.

    கே சுவாமிநாதன்

Post a Comment